கனவே..
எப்போது
அவள் கட்சியில்
நீ சேர்ந்தாய்..
மனமே..
எப்போது
அவள் மடியில்
நீ வீழ்ந்தாய்..
தினம் முழுதும்
கணம் முழுதும்
என் வார்த்தைக்கு
உடன்பட்ட
என் உயிரே..
எப்போது
அவளை
உன்
உலக மென்றாய்..
வானகமும்
வையகமும்
வாசனைப்
பூத் தூவ..
வேதங்களும்
ஐம்பூதங்களும்
பொழுதும் - என்
புகழ் பாட..
சூரியரும்
சந்திரரும்
பகரும் மொழி
பணிய..
சீறி வரும்
கடற் பேரலையும்
என்
சுடர் விழியில்
தணிய..
என்னைச் சுற்றி
இராஜ்ஜியம்..
அதைச்
சொன்னால்
தோன்றும்
காவியம்..
நான்
புவிக்கே
மன்னன் -
ஆயினும்
பிறப்பால்
அடிமைதான்
அவளிடம்..
- அரவிந்த் குமார்.பா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக