என் எழுத்தில்
சுவையாய்
இருப்பவளே..
என் கருத்தில்
கனமாய்க்
கிடப்பவளே..
என் மனதில்
புயலாய்
மையம் கொண்டு
என் விழியை
மழையாய்க்
கடந்தவளே..
எத்தனைத்
துன்பங்கள்
இதுகாறும்
உன்னால்..
பித்தனைப்
போல
இருக்கின்றேன்
எதனால்..
கத்தியால்
குத்தினாலும்
பிழைத்திருப்பேன்
ஆனால்..
நீ
காதலால்
குத்திவிட்டாய்
செத்துவிட்டேன்
அதனால்..
வெள்ளைத்
தாளாய்
இருந்ததென்
மனது..
நீ
பிள்ளைக்
காதல்
பழகிக் கொண்டாய்..
உண்மை
என்றே
நம்பி விட்டேன்..
உன்
கண்மையில்
நான்
கரைந்து விட்டேன்..
என்
நெற்றியில் ஏதும்
எழுத்து
கண்டா
நீ
பற்றியெ ரியும்
பாசம்
கொண்டாய்..
நான்
கற்றதையெ ல்லாம்
கவர்ந்து கொண்டு
மற்றதை யெல்லாம்
மறந்து சென்றாய்..
நீ
காதலோடு
பார்த்தாயே
அவை யெல்லாம்
கற்றதற்குக்
கூலியா..
நீ
கள்ளமின்றி
சிரித்தாயே -
அவையெல்லாம்
திட்டமிட்ட
போலியா..
- அரவிந்த் குமார்.பா
வாலிபக் கவிஞர் வாலியின் நடை தெரிகிறது உங்கள் கவிதையில்
பதிலளிநீக்கு