வியாழன், 5 ஆகஸ்ட், 2010

நித்திலமே..

மாங்கனியில் வண்டு போல - மழை
முகிலுடைக்கும் தென்றல் போல
வான வில்லின் மிச்சம் போல
உன் - பின் கழுத்தின் மச்சம் போல

இரகசியமாயிருக்கிறாய் - என்
இரத்தத்திலும் வசிக்கிறாய்..

தேகமென்பது தேய்ந்து போகும்
மோகமானது தீர்ந்து போகும்

ஆன போதும் என் காதல் வாழும் கண்ணே..
நான் வேகும் போதும் சோதித்துப் பார் பெண்ணே..

ஓயாமல் உன்னை நினைத்தேன் - இமைகள்
சாயாமல் உன்னுருவம் குடித்தேன்..

அந்த செயல்களின் பின் விளைவுகள் - இன்று
இதயத்தில் உன் சுவடுகள்..

நெடுங்காலம் நேசித்த உணர்வுகள் - பழங்காலம்
தொட்டுப் பழகிய நினைவுகள்
முதல் நாளே என்னிடம் தோற்றுவித்தாய்
விழியசைவுக் கெல்லாம் - விரிவுரை
எழுத வைத்தாய்..

உன் புற அழகை கண்டபோது - புத்தியிலே
கொஞ்சம் சஞ்சலம் வந்தது சத்தியமே..

உன் அக அழகால் அத்தனையும் நீக்கினாய்
நீ நீள் கடலும் காணாத நித்திலமே ..

- அரவிந்த் குமார்.பா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக