உன் அன்பாலெ ன்னை உன்பாலி ழுத்தாய்..
நீ பெண்பாலெ ன்னை வெண்பா வடித்தாய்..
தூங்குகின்ற நேரம் கூட - உன் தூய முகம் எண்ண வைக்கிறாய்..
காணுகின்ற தூரமெ ங்கிலும் வானம் போல நிறைந்தி ருக்கிறாய்..
காலைச் சேவல் கூவும் பொழுதே உன் னாதிக்கம் என்னில் ஆரம்பிக்கும்..
உனைக் காணும் ஆவல் மிகுதியாலே இதழ் சாயத்தில் விரல்கள் பொட்டு வைக்கும்..
கால்கள் இடம்மாறியே - என் காலணிக்குள் நுழைந்திருக்கும்..
உன் தோளில் சாயும் வரை என் ஆறறிவும் அணைந்திருக்கும்..
தரையில் பாய் விரித்து மெத்தையில் தூங்குவதும்..
அம்மாவை சில நேரம் அத்தையெ ன்று சொல்லுவதும்..
அன்பாளா உன்னாலே நான் கொள்ளும் அவஸ்தையடா..
தூங்காத ராத்திரிகள் உன்னினைவில் துவளுவதும்..
தலையணையே நீயென்று தனியாகப் புரளுவதும்..
தாளவில்லையடா தவிர்த்தலும் துன்பமடா..
கண்ணாளா.. நீ தரும் கவலைகட்கு பஞ்சமில்லை..
கவிதைக்காய் சொல்லவில்லை காதலொன்றும் இன்பமில்லை..
- அரவிந்த் குமார்.பா
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக