வியாழன், 5 ஆகஸ்ட், 2010

இரவுகள் இழந்தேன்..

இரவுகள் இழந்தேன்
இதயமும் இழந்தேன்
இனிமேல் இழக்க
எதுவுமில்லை..

உணர்வுகள் பிரிந்தேன்
உறவுகள் பிரிந்தேன்
என் உயிரும் தருகிறேன்
தயக்கமில்லை..

அன்பே
என் நாட்களை
நீ
நீளமாக்கிவிட்டுப்
போனாய்..

ஆம்
நெடுஞ்சாலை
இரைச்சலையும்
தாண்டி
என் நெஞ்சில்
நுழைந்தாய்
தேனாய்..

ஏனோ
எந்த ஏற்பாடும்
கொடுக்கவில்லை
எனக்கு
தூக்கம்..

ஆனால்
இவை - நீ
வந்த பிற்பாடு
எனக்குள்
ஏற்பட்ட
மாற்றம்..

இப்போதெல்லாம்
உலறாமல்
விடிவதில்லை
என்னுடைய
ராத்திரி..

இவற்றை யெல்லாம்
நீ - உணராமல்
வருத்துவது
நியாயம்தானா
காதலி..

- அரவிந்த் குமார்.பா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக