செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

தாமரைப் பூவே




தாமரைப் பூவே
என் பிஞ்சு நெஞ்சம்
உன்னிடத்தில்
தஞ்சம் வந்ததா
சொல்..

சூரிய ராஜா
நீ பார்வையால் - சுட்டபின்
நான்
சுற்றம் மறந்த
பெண்..

தாவணி நிலவே
உன் ஆடைக்குள்ளே
எந்தன் ஜீவன்
அலைகின்றதா
பார்..

தமிழின் தலைவா
உள்ளத்தில்
முள்ளொன்று
குத்தியது - அதுவா
உன் உயிர்..

ஆமாம்
சொர்க்கமே
அதை அப்படியே
வைத்திரு
பிய்த்துவிட
வேண்டாம்..

மாட்டேன் அன்பரே
அதை ஆஸ்தியென்று
கருதி
இன்னும் வளர்ப்பேன்
நான்..

நன்றி நங்கையே
எந்தன் நெஞ்சிலே
வண்ணத் திங்களாய்
நீ
வாழ்வாயாக..

போதும் மன்னவா..
உங்கள் பொற்பதம்
அணைத்துக் கொள்கிறேன்
அனுமதிப்பீரா..

- அரவிந்த் குமார்.பா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக