வியாழன், 5 ஆகஸ்ட், 2010
எப்படி ஈர்த்தாய் என்னை..
எனக்குப்
பிடிக்கவில்லை..
உன் பெயரையும்
நான்
இரசிக்கவில்லை..
உன் தோற்றத்தில்
நான்
தோற்கவில்லை..
நீ
கூட்டத்தில்
தனித்து இல்லை..
பதறும ளவில்
உன்
பருவம் இல்லை..
உருகும் வகையில்
உன்
உருவம் இல்லை..
நளினம் எதுவும்
உன்
நடையில் இல்லை..
ஒழுங்கு சிறிதும்
உன்
உடையில் இல்லை..
சிறு
பனி சிந்தும்
பார்வை இல்லை..
ஒரு
தேன் சிந்தும்
வார்த்தை இல்லை..
மொத்தத்தில்
உன் பெண்மையில்
எதுவும் - என்னை
வெகுவாய்க்
கவரவில்லை..
நீ
வேறோர் ஆணை
ஈர்ப்பாய் என்றும்
உறுதியாய்ச்
சொல்வதற்க் கில்லை..
இப்படி
இத்தனை இல்லைகளின்
இல்லாள் நீ
எப்படி
வசீகரித்தாய்
என்னை
.
.
.
.
.
.
விட
அழகான
எனதுயிர் நண்பனை..
அது மட்டும்
எனக்கும் விளங்கவேயில்லை..
- அரவிந்த் குமார்.பா
நித்திலமே..
முகிலுடைக்கும் தென்றல் போல
வான வில்லின் மிச்சம் போல
உன் - பின் கழுத்தின் மச்சம் போல
இரகசியமாயிருக்கிறாய் - என்
இரத்தத்திலும் வசிக்கிறாய்..
தேகமென்பது தேய்ந்து போகும்
மோகமானது தீர்ந்து போகும்
ஆன போதும் என் காதல் வாழும் கண்ணே..
நான் வேகும் போதும் சோதித்துப் பார் பெண்ணே..
ஓயாமல் உன்னை நினைத்தேன் - இமைகள்
சாயாமல் உன்னுருவம் குடித்தேன்..
அந்த செயல்களின் பின் விளைவுகள் - இன்று
இதயத்தில் உன் சுவடுகள்..
நெடுங்காலம் நேசித்த உணர்வுகள் - பழங்காலம்
தொட்டுப் பழகிய நினைவுகள்
முதல் நாளே என்னிடம் தோற்றுவித்தாய்
விழியசைவுக் கெல்லாம் - விரிவுரை
எழுத வைத்தாய்..
உன் புற அழகை கண்டபோது - புத்தியிலே
கொஞ்சம் சஞ்சலம் வந்தது சத்தியமே..
உன் அக அழகால் அத்தனையும் நீக்கினாய்
நீ நீள் கடலும் காணாத நித்திலமே ..
- அரவிந்த் குமார்.பா
இரவுகள் இழந்தேன்..
இதயமும் இழந்தேன்
இனிமேல் இழக்க
எதுவுமில்லை..
உணர்வுகள் பிரிந்தேன்
உறவுகள் பிரிந்தேன்
என் உயிரும் தருகிறேன்
தயக்கமில்லை..
அன்பே
என் நாட்களை
நீ
நீளமாக்கிவிட்டுப்
போனாய்..
ஆம்
நெடுஞ்சாலை
இரைச்சலையும்
தாண்டி
என் நெஞ்சில்
நுழைந்தாய்
தேனாய்..
ஏனோ
எந்த ஏற்பாடும்
கொடுக்கவில்லை
எனக்கு
தூக்கம்..
ஆனால்
இவை - நீ
வந்த பிற்பாடு
எனக்குள்
ஏற்பட்ட
மாற்றம்..
இப்போதெல்லாம்
உலறாமல்
விடிவதில்லை
என்னுடைய
ராத்திரி..
இவற்றை யெல்லாம்
நீ - உணராமல்
வருத்துவது
நியாயம்தானா
காதலி..
- அரவிந்த் குமார்.பா
புதன், 4 ஆகஸ்ட், 2010
கனவே..
எப்போது
அவள் கட்சியில்
நீ சேர்ந்தாய்..
மனமே..
எப்போது
அவள் மடியில்
நீ வீழ்ந்தாய்..
தினம் முழுதும்
கணம் முழுதும்
என் வார்த்தைக்கு
உடன்பட்ட
என் உயிரே..
எப்போது
அவளை
உன்
உலக மென்றாய்..
வானகமும்
வையகமும்
வாசனைப்
பூத் தூவ..
வேதங்களும்
ஐம்பூதங்களும்
பொழுதும் - என்
புகழ் பாட..
சூரியரும்
சந்திரரும்
பகரும் மொழி
பணிய..
சீறி வரும்
கடற் பேரலையும்
என்
சுடர் விழியில்
தணிய..
என்னைச் சுற்றி
இராஜ்ஜியம்..
அதைச்
சொன்னால்
தோன்றும்
காவியம்..
நான்
புவிக்கே
மன்னன் -
ஆயினும்
பிறப்பால்
அடிமைதான்
அவளிடம்..
- அரவிந்த் குமார்.பா
அன்பாளா...
![]() |
|
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010
என் எழுத்தில் இருப்பவளே..
சுவையாய்
இருப்பவளே..
என் கருத்தில்
கனமாய்க்
கிடப்பவளே..
என் மனதில்
புயலாய்
மையம் கொண்டு
என் விழியை
மழையாய்க்
கடந்தவளே..
எத்தனைத்
துன்பங்கள்
இதுகாறும்
உன்னால்..
பித்தனைப்
போல
இருக்கின்றேன்
எதனால்..
கத்தியால்
குத்தினாலும்
பிழைத்திருப்பேன்
ஆனால்..
நீ
காதலால்
குத்திவிட்டாய்
செத்துவிட்டேன்
அதனால்..
வெள்ளைத்
தாளாய்
இருந்ததென்
மனது..
நீ
பிள்ளைக்
காதல்
பழகிக் கொண்டாய்..
உண்மை
என்றே
நம்பி விட்டேன்..
உன்
கண்மையில்
நான்
கரைந்து விட்டேன்..
என்
நெற்றியில் ஏதும்
எழுத்து
கண்டா
நீ
பற்றியெ ரியும்
பாசம்
கொண்டாய்..
நான்
கற்றதையெ ல்லாம்
கவர்ந்து கொண்டு
மற்றதை யெல்லாம்
மறந்து சென்றாய்..
நீ
காதலோடு
பார்த்தாயே
அவை யெல்லாம்
கற்றதற்குக்
கூலியா..
நீ
கள்ளமின்றி
சிரித்தாயே -
அவையெல்லாம்
திட்டமிட்ட
போலியா..
- அரவிந்த் குமார்.பா
தாமரைப் பூவே
![]() |
|
செவத்தவளே..
![]() |
|
திங்கள், 2 ஆகஸ்ட், 2010
காதல் சொல்ல வந்தாள்
என் பெயர் சொல்லி
அழைத்தவள்.
என் உயிர்க்குள்ளே
நிலைத்தவள்.
நலம்தானா
என் சுகம் சரிக்கும்
உன் கண்கள்
என் அகம் பெயர்த்த
உன் இதழ்கள்.
இப்போதுதானா
கிடைத்தது
நேரம்..
இன்றுதானா
விடை பெற்ற துன்
நாணம்..
படபடவெனப்
பேசும் மொழி
எங்கே..
தடதடவென
ஓடும் கால்கள்
எங்கே..
முதன்முதல் வந்த
காதலதைச் சொல்ல
அத்தனையும் இன்று
அடமானம் வைத்தாயோ..
மெதுமெதுவாய்
காதல் சொன்ன பிறகு..
துறுதுறுவெனத்
துளிர்க்குமோ சிறகு..
சரசரவென
இழந்தவை யத்தனையும்
அப்புறமாய் வட்டியுடன்
மீட்பாயோ..
தனியே வந்தபின்
ஏனடி
தள்ளி நிற்கிறாய்..
கவிதை நேரமிது
பிறகேன்
கண்ணீர் வடிக்கிறாய்..
கவலை
பேச வேண்டாம்..
வா..
நிறையக் காதலைப்
பேசுவோம்..
காத்திருக்கிறது
வெளியே
இயற்கை -
வா.. அதனிடம்
வாழ்த்துக்கள் வாங்குவோம்..
- அரவிந்த் குமார்.பா
பச்சைப் பசுங்குயில்
இச்சைக் கருங்குயில்
இப்போது இல்லை என் பக்கம்..
எங்கள் சிறகுகள்
உரசிய சிருங்கார மேகங்கள்
என்னை கேலி செய்து
சிரிக்குது நித்தம்..
கரையில் நடந்தேன்
அலையோடு
ஆறுதல் கிடைக்க..
மழையில் நனைந்தேன்
அழும் போது
கண்ணீரை மறைக்க..
கலைந்து போனது
கனவெல்லாம்..
சிலுவை யானது
நினைவெ ல்லாம்..
மறந்து போக
முயற்சி செய்தேன்
மறதியின் குருதியைக்
குடித்து விட்டாள்..
ஒரு நொடியில்
காதல் கலைந்து போனதும்
என் செடியின்
இலைகள் காய்ந்து போனது..
இன்னொரு மழையில்
துளிர்க்க நினைத்தேன்
சருகாய் இருந்தும்
உதிர மறுக்கிறாள்..
- அரவிந்த் குமார்.பா
கனல் நிலவே
![]() |
|